ஹஜ் யாத்ரிகர்களுக்கு வழியனுப்பு விழா!
ADDED :5199 days ago
காரைக்கால் : காரைக்கால் மாவட்ட சமாதானக் குழு சார்பில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு வழியனுப்பும் விழா நகராட்சி கருத்தரங்க கூடத்தில் நடந்தது.விழாவில் கலெக்டர் பிராங்க்ளின் லால்டின் குமா தலைமை தாங்கி, புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு சால்வை அணிவித்தார். காரைக்கால் மாவட்டத்திலிருந்து 27 பேர் ஹஜ் பயணம் மேற் கொள்கின்றனர்.நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.