உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மங்குடி கோவிவில் ஸம்வத்ஸராபிஷேக விழா

செம்மங்குடி கோவிவில் ஸம்வத்ஸராபிஷேக விழா

திருவாரூர்: திருவாரூர் அருகே, செம்மங்குடி கோவிலில் ஸம்வத்ஸராபிஷேக மகோற்சவ விழா நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, செம்மங்குடியில், ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு, ஆனந்தவல்லி ஸ்ரீமஹாமேரு ஸம்வத்ஸராபிஷேக மகோற்சவம், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று காலை, 7:30 மணிக்கு, யாகசாலையில் இரண்டாம் கால பூஜை; 9:00 மணிக்கு, ஆனந்தவல்லி மஹாமேருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, கடம் புறப்பாடு; 10:00 மணிக்கு, ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் மற்றும் மஹாமேருக்கு கலச அபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு, காலை முதல், மாலை வரை, குழந்தைகளின் பரத நாட்டியம் உள்ளிட்ட, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை, 6:00 மணிக்கு, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோபூஜை, லட்சார்ச்சனை; இரவு, 7:00 மணிக்கு, இன்னிசையுடன் கிளி வாகனத்தில் உற்சவர் வீதி உலா நடந்தது. இன்று, திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !