உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் வரும் 1ல் மாசி பிரம்மோற்சவம்

திருத்தணி முருகன் கோவிலில் வரும் 1ல் மாசி பிரம்மோற்சவம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, வரும், மார்ச் 1ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ௧௨ நாட்கள் நடக்கும் இவ்விழாவில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, வரும், மார்ச் 1ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது. மறுநாள் (2ம் தேதி) காலை, 5:30- - 6:00 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம், 8ம் தேதி இரவு, தங்கத்தேர், 10ம் தேதி அதிகாலையில் வள்ளி திருக்கல்யாணம் உற்சவம், 11ம் தேதி கொடி இறக்கம், 12ம் தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !