வீடு கட்டும் பணி விரைவில் நிறைவேற எந்த கடவுளை வணங்க வேண்டும்?
ADDED :3147 days ago
சிவபெருமானை மனதில் நினைத்து காலை, மாலையில் ஞான சம்பந்தர் பாடிய இந்த தேவாரப் பாடலை படித்து வந்தால் விரைவில் கட்டிடப்பணி நிறைவேறும்.
நன்றுடையானை தீயதில்லானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானை
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்குன்றுடையானை
கூற என்னுள்ளம் குளிரும்மே
புதிய வீட்டில் குடியேறிய பின், முடிந்தால் இந்த பாடலுக்குரிய தலமான திருச்சி தாயுமான சுவாமியைத் தரிசித்து வாருங்கள்.