தன்னாசியப்பன் கோவில் விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3148 days ago
சென்னிமலை: சென்னிமலை, மலை மீதுள்ள முருகன் கோவில் பின்புறம் உள்ள தன்னாசியப்பன் கோவிலில், 12ம் ஆண்டு மாசி திருவிழா மற்றும் பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள செங்கத்துரை பூசாரி மடத்தில், காலை, 8:00 மணியளவில், தீர்த்தக் குடங்களுக்கு அபிஷேக பூஜை நடந்தது. அதன்பின், பக்தர்கள் தீர்த்தக் குடங்களுடன் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அடுத்து, தன்னாசியப்பன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் யாக பூஜை நடந்தது. பிண்ணாக்கு சித்தர், சரவணமா முனிவர் மற்றும் தன்னாசியப்பர் சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தன்னாசியப்பன் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.