உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை

திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவில்களில், வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று, காலை, 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது.இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !