உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திருவள்ளூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் உள்ள சாய்பாபா கோவில்களில், நேற்று, திறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சாயிபாபா சன்னிதியில், நேற்று, காலை, 9:00 மணிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாயிபாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தெற்கு குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில், நேற்று இரவு, தீபோற்சவம் நடந்தது. திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள, ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், நேற்று, காலை, மதியம் ஆரத்தி, ஆராதனை நடந்தது. மாலை, ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !