திருப்பரங்குன்றம் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் கொடியேற்றம்
ADDED :3228 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகர் சீனிவாசா நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலையில் விளக்கு பூஜை, கூழ் காய்ச்சும் விழா நடந்தது. ஏப்.,7ல் பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு பொங்கல் வைத்தல், பூச்சட்டி எடுத்தல் முடிந்து அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 8ல் முளைப்பாரி உற்சவம், ஏப்., 9ல் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் முடிந்து அன்னதானம் நடக்கிறது.