லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
திருவாலங்காடு: லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலில், நேற்று நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவாலங்காடு ஒன்றியம், காவே ரிராஜபுரம் கிராமத்தில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் நடந்து, நேற்று, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 7:00 ம ணிக்கு, நான்காம்கால பூஜைகள் மற்றும் கலச ஊர்வலம் நடந்தது. காலை, 8:00 ம ணிக்கு, புதிதாக அமைக்கப்பட்ட கோவில் விமானத்தின் மீது, கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரவு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கிராம வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.