சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3439 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில், பங்குனி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் நடந்தது. காலை சுவாமி, தேவியர்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் பூதேவி, ஸ்ரீதேவியர், நாராயணப்பெருமாள் சப்பரங்களில் ரதவீதியில் உலா வந்து, கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் மகளிர் நிர்வாகிகள் சவுந்திரியம்மாள் தலைமையில் திருமண சீர்வரிசையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். பின் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது, பெ ருமாள் கோவில் சன்னதி தெரு நண்பர்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி லதா தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.