உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேங்கிடபுரத்தில் நாளை சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

திருவேங்கிடபுரத்தில் நாளை சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

பொன்னேரி: பொன்னேரி, திருவேங்கிடபுரத்தில், நாளை சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பொன்னேரி, திருவேங்கிடபுரம் கிராமவாசிகள் சார்பில், தசரதன் நகர் பூங்காவில், இரண்டு ஆண்டுகளாக சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்து வருகிறது. மூன்றாம் ஆண்டு திருக்கல்யாண வைபவரம் நாளை மாலை, 5:00 மணிக்கு, பொன்னியம்மன் கோவிலில் இருந்து, சீர்வரிசை கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

நிகழ்ச்சிகள் விபரம்
நேரம்      நிகழ்ச்சி

மாலை 5:30 மணி     குழந்தைகளின் மாறுவேட நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டியம்
மாலை 6:00 மணி     ஒய்யாளி, மாலை மாற்றுதல், பூப்பந்து
மாலை 7:00 மணி      சங்கல்பம்
மாலை 7:30 மணி     மாங்கல்ய பூஜை, ஓமம் வளர்த்தல்
இரவு 7:50 மணி      திருக்கல்யாணம்
இரவு 8:00 மணி      பூர்ணாஹூதி
இரவு 8:15 மணி      தீப ஆராதனை, தீர்த்த பிரசாதம்
இரவு 8:45 மணி      திருக்கல்யாண விருந்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !