உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்தநாயக்கன்பாளையம் கூத்தாண்டவர் கோவிலில் வரும் 14ல் சித்திரை விழா

பெத்தநாயக்கன்பாளையம் கூத்தாண்டவர் கோவிலில் வரும் 14ல் சித்திரை விழா

பெத்தநாயக்கன்பாளையம்  ஏத்தாப்பூர் அருகே, பனமடல் கூத்தாண்டவர் கோவிலில் வரும், 14ல், சித்திரை தேர்த்திருவிழா நடக்கிறது. முன்னதாக, இன்று இரவு பெரியம்மாள் குடியழைப்பும், நாளை காலை சின்னம்மாள் குடியழைப்பும், இரவு கூத்தாண்டவர் குடியழைப்பும் நடக்கிறது. வரும், 14 அதிகாலை, 4:30 மணிக்கு கூத்தாண்டவர் கண் திறப்பும், காலை, 9:00 மணியளவில் கூத்தாண்டவர் திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் கூத்தாண்டவர், சின்னம்மாள், பெரியம்மாள் சுவாமிகள் திருவீதி உலா, மாலை, 3:00 மணியளவில் அலகு குத்துதல் நடக்கிறது. வரும், 15ல், திருத்தேர் இழுத்தல் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !