உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி:சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 2ல் கொடி யேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிம்ம வாகனம், காமதேனு, கைலாச பர்வத, வேதாள, வெள்ளி ரிஷபம், குதிரை, யானை வாகனங்களில் ரதவீதிகளில் உலா வந்து அலங்கார மண்டபகப்படிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு 9 ம் நாள் விழாவில் பொங்கல், அக்னி சட்டி, உடலில் கயர் குத்தி, முடி, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை என பக்தர்கள் நேர்த்தி க்கடன் செலுத்தினர். கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி குடும்பத்தோடு கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் வேப்பிலையில் உருண்டு வணங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். உருவங்கள் வாங்கி படைத்தனர். நேற்று காலை நாட்டாமைகள் ரதம் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் சின்ன தேரில் விநாயகர் எழுந்தருள ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தது. அதன்பின் மாரியம் மன் எழுந்தருள தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது கீழ ரதவீதி, தெற்கு ரத வீதியில் சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !