உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை மாத அமாவாசை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

சித்திரை மாத அமாவாசை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

திருத்தணி : சித்திரை மாத அமாவாசையையொட்டி, அம்மன் கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.திருத்தணி அடுத்த, மத்தூர் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி
அம்மன் கோவிலில்,நேற்று, சித்திரை மாதஅமாவாசையையொட்டி, மூலவருக்கு பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இதில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதே போல், திருத்தணி நகரில் உள்ள,படவேட்டம்மன் கோவில், தணிகை
மீனாட்சி அம்மன் கோவில், தணிகாசலம்மன் கோவில், வன துர்க்கை அம்மன் மற்றும் பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் உட்பட பல கோவில்களில் அமாவாசையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !