மயானேஸ்வரர்!
ADDED :3278 days ago
சிதம்பரம் அண்ணாமலைநகர் பிரதான சாலையோரம் ஒரு மயானத்தில் அமைந்துள்ள கோயிலில் இறைவன் மயானேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார். பிரதோஷ நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மயானத்தில் கோயில் கொண்டுள்ள ஈசனை வழிபட்டால் ஆரோக்யத்தில் குறையில்லாமல் அமைதியான வாழ்வும் அமையும் என்பது நம்பிக்கை.