ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்
ADDED :3116 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலில் 10 நாள் வசந்தஉற்சவம் துவங்கியது. அக்னி நட்சத்திரம் துவங்கியதை தொடர்ந்து கோடையில் வெம்மை தணிந்திடவேண்டி நடக்கும் வசந்த உற்சவத்தில், தினமும் காலை 11:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமைகுறடு மண்டபத்தில் வசந்த உற்சவம் நடக்கிறது. அப்போது திருமேனி முழுவதும் சந்தனம் பூசி, மாலை சூடி காட்சியளிப்பார். நிறைவுநாளான சித்ராபவுர்ணமியன்று ஆண்டாள் சேஷ வாகனம், ரெங்கமன்னார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார்
ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா செய்துள்ளனர்.