பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார் முருகன்
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாளுடன் பாண்டியராஜாவாக சுப்பிரமணிய சுவாமி மே 6ல் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடானார். திருக்கல்யாணம் முடிந்து, மதுரை சுவாமிகளுடன் திருப்பரங்குன்றம் சுவாமிகள் வீதி உலா சென்று அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் மாலை விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து, நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெற்காவணி மூல வீதி மண்டபத்தில் எழுந்தருளினர்.
பூப்பல்லக்கு: சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்து சர்வ அலங்காரத்தில் மாலையில் பூப்பல்லக்கில் சுவாமி, தெய்வானை புறப்பாடாகி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து அம்மன் சன்னதியில் எழுந்தருளினார். மதுரை கோயிலில் எழுந்தருளியிருந்த பவளக்கனிவாய் பெருமாள் புறப்பாடாகி, சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்பினர்.