உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா

பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா

சிவகாசி, சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா 11 நாட்கள் நடந்தது. அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சூரசம் ஹாரம், ஆறாம் விழாவில் கல்மண்டபத்தில் வீற்றிருந்து சொரூப திருக்கோலத்தில் காட்சியளித்தார். கழுகேற்றம் நடந்தது. பக்தர்கள் கயறு குத்து, அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா நிறைவாக நேற்று தேர் திருவிழா நடந்தது. விநாயகர் ,அம்மன் அலங்கரிக்கப்பட்டு தனித்தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !