சண்டிகேஸ்வரரை வழிபட்டால் தான் சிவனை வழிபட்ட பலன் கிடைக்குமா?
ADDED :3261 days ago
சண்டிகேஸ்வரர் சிவனடியார்களில் முதன்மையானவர். சிவபூஜைக்கு இடையூறு செய்த தந்தையின் காலை துண்டித்தவர். இவரது பக்தியை மெச்சிய சிவன், தாம் உண்பது, உடுத்துவது போன்ற நிர்மால்யத்தை (சுவாமிக்கு சாத்திய பூ, மாலை, பிரசாதம்) வழங்க அருள்புரிந்தார். வழிபடுபவரின் தகுதியறிந்து பலன் அளிக்கும் அதிகாரம் இவருக்குஉண்டு. இவரை வழிபட்டால் மட்டுமே சிவனருளைப் பெற முடியும்.