உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாபிேஷகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாபிேஷகம்

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாபிஷேகம் நடந்தது. கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திர தினத்தன்று ஆண்டு தோறும் வருடாபிஷேகம் நடக்கிறது. விசாக கொறடு மண்டபத்தில் தங்கம், வெள்ளி குடங்கள், 16 சொம்புகளில் புனிதநீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க் கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படியானது. மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு அபிஷேகம் முடிந்து அனைத்து மூலவர்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !