திரு இருதய ஆண்டவர் ஆலய 100 ம் ஆண்டு விழா துவங்கியது!
ADDED :5210 days ago
கொடைக்கானல் : மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவர் ஆலய 100 ம் ஆண்டு விழா துவங்கியது. சிவகங்கை மறை மாவட்ட பிஷப் சூசைமாணிக்கம் துவக்கி வைத்தார். கொடிமரம் அர்சிப்பு, நூற்றாண்டு விழா கல்வெட்டு திறப்பு, திருப்பலி நடந்தது. திரியார்கள் அப்போலின் கிளாரட் ராஜ், அந்தோணிசாமி, அமலா, நகராட்சி தலைவர் கோவிந்தன், துணைத் தலைவர் எட்வர்டு, இறைமக்கள் பங்கேற்றனர்.