அவலூர் பேட்டை: ரவணாம்பட்டில் கும்பாபிஷேகம்
ADDED :3164 days ago
அவலூர் பேட்டை: ரவணாம்பட்டு கிராமத்தில், கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனூர் தாலுகா, ரவணாம்பட்டு கிராமத்தில் வரசித்தி விநாயகர், கெங்கையம்மன்,
முகமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனையும், நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜை, மகா பூர்ணாஹூதியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.