உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவில் உண்டியலில் ரூ.76 லட்சம் காணிக்கை

திருவண்ணாமலை கோவில் உண்டியலில் ரூ.76 லட்சம் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில், பக்தர்கள், 76 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள், மாதம்தோறும் பவுர்ணமி முடிந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் தலைமையில், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியலில், 76 லட்சத்து, 6,278 ரூபாய், 147 கிராம் தங்கம், 1,519 கிராம் வெள்ளி நகை இருந்தன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !