மருதூர் தேர் தீப்பிடித்து எரிந்து சேதம்
ADDED :3079 days ago
செந்துறை : அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா மே 30 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதுநாள் முதல் மகாபாரதம் பாடப்பட்டு தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடந்து வந்தன. நேற்று மாலை தீ மிதித்த பின்பு தேர் இழுக்க இருந்தனர். இந்நிலையில், பக்தர்கள் தீமிதித்து முடிந்த போது, மாவிளக்கின் தீ தேரின் தொம்பையில் பட்டு தீ மளமளவென்று பரவி தேர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தேரில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.