உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை அந்தோணியார் ஆலயத்தில் பெரிய சப்பர பவனி

நாகை அந்தோணியார் ஆலயத்தில் பெரிய சப்பர பவனி

நாகப்பட்டினம்:நாகை, கடற்கரை சாலையில், பல நுாற்றாண்டுகள் பழமையான அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. தேவாலயத்தின் ஆண்டு திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, கூட்டுப் பாடல் திருப்பலிக்கு பின், பெரிய சப்பர பவனி நடைபெற்றது. மறை மாவட்ட முதன்மை பாதிரியார் வின்சென்ட் தேவராஜ் மற்றும் பாதிரியார்கள் பெரிய சப்பரத்தை புனிதம் செய்து, பவனியை துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட பெரிய சப்பரத்தில், புனித லுார்து மாதா மற்றும் அந்தோணியார் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !