பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED :3219 days ago
பழநி, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயில் நடராஜர் சன்னதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நடராஜருக்கு பால், பன்னீர் உள்பட 16வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் நடராஜர் திருவுலா வந்தார். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு தீபாரானை நடந்தது. இதேபோல பெரிய நாயகியம்மன் கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் நிரப்பிய கும்பங்கள் வைத்து பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா செய்தனர்.