ராசிபுரம் பெருமாள் கோவிலில் வரும் 4ல் சயனோற்சவ விழா
ADDED :3041 days ago
ராசிபுரம்: ராசிபுரம், பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், 29ம் ஆண்டு சயனோற்சவ விழா, மாத ஏகாதசி, 28ம் ஆண்டு தொடக்க விழா சயனோர்ச்சவம் வரும், 4ல், நடைபெறுகிறது. அன்று காலை, 7:00 மணிக்கு, பொன்வரதராஜ பெருமாளுக்கு, திருமஞ்சனம் நடந்து, 9:00 மணியளவில் நகர் வலம் வருதல் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளை சந்தானம் பட்டாச்சாரியார், லஷ்மண பட்டாச்சாரியார் நடத்தி வைக்கின்றனர். மாலை 6:00 மணிக்கு, நகர புலவர் பெருமக்கள் சார்பில், சமய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.