நாமக்கல் ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3006 days ago
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், ஆடி முதல் வியாழனை முன்னிட்டு, ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் அடுத்த, தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், ஆடி முதல் வியாழனை முன்னிட்டு, சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் எனும் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.