ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் சப்பர பவனி
ADDED :3038 days ago
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நடந்த புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 16ல் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் சர்ச் வளாகத்தில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அலங்கரித்த தேரில் சந்தியாகப்பர்
எழுந்தருளியதும், பக்தர்கள் திருத்தேரை சுமந்தபடி சர்ச் வளாகத்திற்குள் பவனி வந்தனர். இவ்விழாவில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தென்னங்கன்று வைத்து பக்தர்கள் நேர்த்தி கடன்