ஊட்டி முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :3038 days ago
ஊட்டி : ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது.
காலை 10:00 மணிக்கு சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், நவகிரகங்கள், ஏழுஹெத்தையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து அருள்வாக்கு, ஆன்மிக சொற் பொழிவு, நடன நிகழ்ச்சிகள் நடந்தது. திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.