கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளின் 160ம் ஆண்டு அவதார விழா
ADDED :2995 days ago
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 160ம் ஆண்டு அவதார விழா நேற்று கட்டிக்குளத்தில் உள்ள கோயிலில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கட்டிக்குளம் கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராம மக்கள் செய்து இருந்தனர்.