உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி விழாவில், பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் நடந்து வந்தது. நேற்று, காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மதியம் 2:00 மணிக்கு, அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, வாண வேடிக்கைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !