கரிவலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு!
ADDED :5257 days ago
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பால்வண்ணநாத சுவாமி சன்னதி கொடிமரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு அன்று மாலை பால், பன்னீர், தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி போன்ற அபிஷேகம் நடந்தது. பின் பிரதோஷ நாயகன் சுவாமி சந்திரசேகரர் சுவாமி சன்னதி வெளிபிரகாரத்தில் மும்முறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது. ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.