கடலில் பால் ஊற்றி சமுத்திர ராஜ வழிபாடு
நாகப்பட்டினம்: இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டி, கடல் நீரில் பாலுாற்றி, பூஜை பொருட்களை விட்டு, மீனவ கிராம பெண்கள் வழிபாடுநடத்தினர். ’சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து காக்க வேண்டும்; கடலில் மீன் பிடிக்கச் செல்லும் குடும்பத்தினர் பாதுகாப்பாக, கரை திரும்ப வேண்டும்’ ஆகிய வேண்டுதல்களை முன் வைத்தனர். மேலும், தங்களுக்கு வாழ்வளிக்கும் கடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நாகையில், ஆண்டுதோறும், சமுத்திர ராஜ வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு வழிபாட்டை முன்னிட்டு, நாகை, அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் சப்த கன்னியருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நேற்று நடந்தது. கோவிலில் இருந்து, ஆயிரக்கணக்கான மீனவர்களும், மீனவப் பெண்களும், மங்கள பொருட்கள், பூஜை பொருட்கள் மற்றும் பால், பழங்களுடன் ஊர்வலமாககடலுக்கு சென்றனர். கடல் நீரில் பாலுாற்றி, மங்கள பொருட்கள்மற்றும் பழங்களை கடல் நீரில் விட்டு, நீராடி,சமுத்திர ராஜ வழிபாடு நடத்தினர்.