சத்ரு சம்ஹார யாகம்: பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3054 days ago
கொடுமுடி: சத்ரு சம்ஹார யாகத்தில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில், நேற்று, சத்ரு சம்ஹார யாகம் நடந்தது. கொடுமுடி ஆதினம் சிவஸ்ரீ தண்டபாணி குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, வேத மந்திரங்கள் முழங்கினர். முன்னதாக முன்னதாக அம்பாள் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.