பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பழநி: பிரதோஷத்தை முன்னிட்டு, பழநி சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை 4.30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷவேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமா மகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது. மலைக்கோயில் கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், நேதாஜிநகர் காமாட்சிஅம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பால், பழங்கள், பொங்கல் பிரசாதமாக பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால் சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கைலாசநாதர் மற்றும் செண்கவள்ளி தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.