உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை நவராத்திரி விழா: தினசரி கலை நிகழ்ச்சிகள்

நாளை நவராத்திரி விழா: தினசரி கலை நிகழ்ச்சிகள்

பழநி: பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா நாளை (செப்.,21ல்) காப்புக் கட்டுதலுடன் துவங்கி 30 வரை நடக்கிறது. நாள்தோறும் பக்திசொற்பொழிவுகள், நடனநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில்களில் பகல் 12 மணி உச்சிக்காலபூஜை வேளையில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு காப்புகட்டுதல் நடக்கிறது. போகர் ஜீவசமாதி சன்னதியில் காப்பு கட்டப்பட்டு புவனேஸ்வரி அம்மனை புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு கொண்டு வருவர். பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு செப்.21 முதல் 30 வரை தினசரி மாலை 6 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெறும். கோதைமங்கலத்தில் செப்.30ல் விஜயதசமி அன்று அம்பு, வில் போட்டு சூரன்வதம் நடக்கிறது. பெரியநாயகியம்மன் கோயிலில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9மணிவரை பக்திசொற்பொழிவுகள், பரதநாட்டியம், கிராமியநடனம், பக்தி இன்னிசை, வீணை வாசிப்பு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !