அவலூர்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :3133 days ago
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வேணுகோபால் சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெருக்களில் உறியடித்தலும், கடைவீதியில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ண பெருமான் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், பஜனையுடன் வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டனர். யாதவர் சமுதாயத்தினர், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.