செஞ்சி சிவசுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :2938 days ago
செஞ்சி: செஞ்சி பெரியகரம் சிவசுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி பெரியகரம், சிவசுப்பிரமணியர் கோவிலில் ஏழாம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. ஐந்தாம் நாள் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 25ம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது. மறுநாள் இரவு வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் திருக்கல்யாணமும், சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.