உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகர் கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா

மயிலம் முருகர் கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா

மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் ஐப்பசி  மாத கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தொய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் ஐப்பசி மாத  கிருத்திகை விழா   நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இரவு 7:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பரமணியர் சுவாமி மலை வலம் வந்தார். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவல காட்சி நடந்தது. இதில்  ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !