உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் மன்றத்தில் ஐப்பசி மாத பூச விழா

வள்ளலார் மன்றத்தில் ஐப்பசி மாத பூச விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஐப்பசி மாத பூச விழா நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் நாராயணன், பாலு, முர்த்தி முன்னிலை வகித்தனர். மன்ற பூசகர்கள் ராமலிங்கம், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கபட்டது. சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கபட்டது. செட்டியந்துர் சன்மார்க் சங்க தலைவர் ராமலிங்கம், தலைமை ஆசிரியர் செல்வராஜ், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !