பட்டத்து விநாயகர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :3212 days ago
தாண்டிக்குடி, - தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் உள்ள ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு 16 வகையான அபிேஷகமும் ஆராதனையும் நடந்தது. பக்தர்கள் பிரதோஷ வழிபாடு மந்திரங்களை உச்சரித்தனர். மேலும் விளக்கு ஏற்றி வழிபாடு நடந்தது. சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.