உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் கொட்டி தீர்த்த மழை

சபரிமலையில் கொட்டி தீர்த்த மழை

சபரிமலை: சபரிமலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் மலையேறும் பக்தர்கள் சிரமப்பட்டனர்.மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.,15-ம் தேதி திறந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் பகலில் அதிக வெயிலும், இரவில் கடும் குளிரும் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சில நிமிடம் மட்டும் மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு பின் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 2:00 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்த தால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.18-ம் படி ஏறிய பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தரிசனம் செய்தனர். மலை ஏறிய பக்தர்கள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !