கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3073 days ago
கமுதி, கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா நடந்தது. கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் திங்கள்கிழமையை முன்னிட்டு 108 சங்குகளால் பெருமான் சிவனின் லிங்கத்தின் வடிவம் உருவாக்கப்பட்டு பூஜையும் நடத்தபட்டது. பின்னர் சோமவார திங்களை முன்னிட்டு சிவனுக்கு பால், சந்தனம், பன்னீர், விபூதி, இளநீர் உட்பட வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.