முனியசுவாமி கோயிலில் 37ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
ADDED :3033 days ago
பேரையூர், பேரையூர் அருகே பூசலப்புரம் முனியசுவாமி கோயிலில் 37ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தன. முனியசுவாமி, சின்னக் கருப்பசாமி, கோட்டை மந்தைகருப்பசாமி, ஒச்சாண்டம்மன், பெரியகருப்பசாமி, பேச்சியம்மன், மாயாண்டிச்சாமி, வீரபத்திரசாமி கோபுர கலசங்களில் புனிதநீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிேஷகத்தை நடத்தினர்.