உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் செடிகள் அகற்றப்படுமா?

விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் செடிகள் அகற்றப்படுமா?

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் மண்டியுள்ள செடிகளை அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் மண்டியுள்ள செடிகளால் அதிலுள்ள சிற்பங்கள் சிதைந்து, கீழே விழுந்து சேதமடையும் நிலை உள்ளது. பழமையான கோவில்களில் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கோபுரங்கள் செடி கொடிகள் மண்டி, கோபுரங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே, கோபுரங்களில் மண்டியுள்ள செடிகளை அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !