சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2900 days ago
அரூர்: அரூரில் உள்ள, சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி, நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மேலும், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.