வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2888 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல்மலையனுார் அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு, அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.