பெருமாள் கோவிலில் கிருஷ்ணன் உபன்யாசம்
ADDED :3005 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ உலகளந்த பெருமாள் கோவிலில் உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசம் இரண்டு நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை, வசந்த மண்டபத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில், நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றும். உபன்யாச நிகழ்ச்சி நடக்கிறது.