பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மகா சஷ்டி சிறப்பு அலங்காரம்
ADDED :2975 days ago
நாமக்கல்: நாமக்கல், பாலதண்டாயுதபாணிக்கு சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. நாமக்கல், மோகனூர் சாலையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று சஷ்டியை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு காலையில் மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. அதேபோல், நாமக்கல் கடை வீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலிலும் அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.